பள்ளி தலைமை ஆசிரியையிடம் ஒருமையில் அவதூறாக பேசிய ஊராட்சி மன்றத்தலைவரின் கணவர்..!

 “நான் இங்கேயே பாய்  போட்டு படுத்துக் கொள்ளட்டுமா?”

Feb 08, 2024 - 03:59
Updated: 3 years ago
0 4.7
பள்ளி  தலைமை ஆசிரியையிடம் ஒருமையில் அவதூறாக பேசிய ஊராட்சி மன்றத்தலைவரின் கணவர்..!

நாற்றம்பள்ளி அருகே திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையிடம்  ஒருமையில் அவதூறாக பேசியதால்  பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயன செருவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மிதிவண்டியை நிறுத்துவதற்கான கொட்டகை அமைப்பதற்காக திட்ட இயக்குனர் செல்வராசு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 4.30 லட்சம் ரூபாயை ஒதுக்கி, அதற்கான பணி ஆணையை வழங்கியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினியின் கணவர் தேசிங்கு ராஜா பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே கொட்டகை அமைப்பதற்கான ஆய்வு மேற்கொண்டபோது, பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதி,  “இந்த இடத்தில் கொட்டகை அமைக்க திட்டமிட வேண்டாம்”, எனவும்,  “அவ்வாறு செய்வதால்  மரங்கள் பாதிக்கப்படுகிறது” என்றும் கூறினார்.  

மேலும்,  “பள்ளி மாணவ மாணவிகளுக்கும் விசாலமான இடமாக இருப்பது பாதிக்கப்பட்டு இறுக்கமான ஒரு சூழ்நிலை ஏற்படும்” எனவும் ,   “வேறு ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள்”,  என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து,  தேசிங்கு ராஜா,  அந்த ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  அப்போது,   “நான் இங்கேயே பாய்  போட்டு படுத்துக் கொள்ளட்டுமா?” என்று அவதூராகவும், “உன் வேலையை நீ பார்; நான் என் வேலையை பார்க்கிறேன்”,  என்று ஒருமையிலும் பேசியுள்ளார். பள்ளி வளாகத்தில் வைத்து  ஒரு தலைமை ஆசிரியையிடம் ஊராட்சி மன்றத் தலைவரின்  கணவர் இப்படி மரியாதையின்றி பேசியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிக்க   | 45 லட்சம் மதிப்பிலான நிலத்தை வனத்துறைக்கு தானமாக வழங்கிய குடும்பத்தினர்..!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 3
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 2
Angry Angry 0

Comments (0)

User