இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Aug 06, 2026 - 11:30
0 270
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

தவெக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்  பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடு பற்றியும் வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார்.

இந்த அறிவிப்பில் ஒரு முக்கிய திட்டமான வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோற்றத்திற்காகவே ரூ 10 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். நெல்,சிறுதானியங்கள்,பயறு வகைகள், எண்ணெய் வித்துகள்,பருத்தி சிறுதானியங்கள்,பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களில் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும் என்றும் முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள், 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

மேலும் வெற்றி இல்லத்தரசி  வீட்டுத் தோட்டம் வீட்டு தோட்டங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி நச்சுத்தன்மையற்ற பழங்களும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுவதால் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறைந்துள்ளது.

எனவே, நகர்புறங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும், கிராமப்புறங்களில் வீட்டை சுற்று அமைந்துள்ள இடங்களிலும் செங்குத்து தோட்டம் மற்றும் நீரியியல் தோட்டம் ஆகிய அமைப்புகளில் காய்கறிகள், பழங்கள், மற்றும் மூலிகை செடிகள் அமைத்து மன மலர்ச்சியையும் வளமான சூழலையும் ஏற்படுத்த "வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்" நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் மாநில நிதியில் இருந்து செயல்படுத்தப்படும்.




What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User